கனடா சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்: பயணிகள் காயமின்றி தப்பினர்

By செய்திப்பிரிவு

கனடாவில் டோரண்டோ  நகரின் இரு விமானங்கள் தரையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் தீ பிழம்பு உண்டானது.

இதுகுறித்து டோரண்டோ விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், டோரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மெக்சிகோவின் கேன்கன்னிலிருந்து வந்தடைந்த வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று தரைத் தளத்தில் நின்று கொண்டிருந்த மற்றுமொரு விமானம் மீது மோதியது. இதனால் அதன் இறகுப் பகுதியில் தீ பிழம்பு உண்டானது. உடனடியாக அந்த விமனாத்திலிருந்த 168 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

இந்த விபத்து தொடர்பாக வெஸ்ட் ஜெட் விமானம் தரப்பில், "பயணிகள் அனைவரும் அவசர வெளியேற்றப் பகுதி மூலம், வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு அவசர உதவி குழுவினர் உடனடியாக உதவிகள் வழங்கப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்தப்படு என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்