பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: மூத்த போலீஸ் அதிகாரி பலி; 6 போலீஸார் காயம்

By செய்திப்பிரிவு

 பாகிஸ்தானின் உள்ள பெஷாவர் நகரில் மூத்த போலீஸ் அதிகாரி மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகம் தரப்பில், "பெஷாவர் நகரில் இன்று (சனிக்கிழமை) மூத்த போலீஸ் அதிகாரியான அஷ்ரப் நூர் தன்னுடைய வாகனத்தில் அவரது பணிக்கு  சென்று கொண்டிருந்தபோது அவரது அலுவலகத்தின் அருகே அவரது வாகனத்தின் மீது தீவிரவாதி ஒருவர் வெடுகுண்டு நிரப்பிய வாகனத்தை கொண்டு மோதினார்.

இதில்  நூரின் வாகனம் தீப்பற்றி ஏரிந்தது. இதில் அஷ்ரப் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த பாதுகாவலர் ஒருவரும் இதில் மரணமடைந்தார். இந்தத் தாக்குதலில் ஆறு போலீஸார் காயமடைந்தனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த போலீஸார் பெஷாவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தீவிரவாதத்துக் எதிரான அரசின் நடவடிக்கையை தொடரும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இதே பகுதியில் தாலிபன்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 3 போலீஸார் கொல்லப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்