தென் பசிபிக்கிலுள்ள தீவுப் பகுதியான நியூ கலிடோனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், "ஆஸ்திரேலியாவுக்கு அருகே தென் பசிபிக் தீவுப் பகுதியான நியூ கலிடோனியாவில் இன்று (திங்கட்கிழமை) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் இப்பகுதியில் இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து நியூ கலிடோனியாவில் சில பகுதிகளில் ஒரு மீட்டருக்கு மேல் அலைகள் மேல் எழுந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago