ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமானது: ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

ஈரானுடன் செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள ட்ரம்ப் அதனை அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான ஒப்பந்தம் என்றும் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் வெள்ளிக்கிழமை கூறும்போது, "ஒபாமா பதவி காலத்தில் ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை தொடர முடியாது. அந்த ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் போடப்பட்ட மிக மோசமான ஒப்பந்தம்” என்றார்.

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனைகளை நடத்திவரும் ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுடான அணுஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

இந்த நிலையில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்க இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

ஈரான் அணுஆயுத சோதனைகள் மேற்கொள்வதை தடுப்பதற்காக இந்த புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்பட இருப்பதாகவும், இதற்கு அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

க்ரைம்

17 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

41 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்