சென்னை
பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் விவரங்களை விரைவாக அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்
கான முன்னேற்பாடு பணிகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுத்தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள தலைமையாசிரியர்கள், அனைத்து வகை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர்களின் விவரங்களை இறுதி செய்துஅனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளி வாரியாக ஆசிரியர்கள் விவரப்பட்டியலை குறிப்பிட வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து விடைத்தாள் அச்சிடுதல் மற்றும் வினாத்தாள் தயாரிப்பு போன்ற அடுத்தகட்ட பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
3 hours ago
உலகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
வேலை வாய்ப்பு
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago