சேலம் அரசு பள்ளிகளில் சிற்றுண்டி திட்ட ஆய்வு - மாணவர்களுடன் சாப்பிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சேலம் அரசு பள்ளிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலை சிற்றுண்டி திட்ட செயல்பாடு குறித்து அறிவதற்காக மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் சேலம் உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சேலம் மாநகராட்சி முல்லை நகர் மற்றும் நெத்திமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா, உணவு தரமானதாக உள்ளதா என்று கேட்டு உறுதி செய்தார். மேலும், காலை எத்தனை மணிக்கு உணவுகள் வழங்கப்படுகிறது, மாணவர்கள் எவ்வளவு பேர் பயனடைகிறார்கள் என்பதையும் கேட்டறிந்தார். பின்னர் அப்பள்ளி மாணவர்களுடன் காலை உணவருந்தினார். மாணவர்களுக்கு அளிக்கப்படும் கற்றல், கற்பித்தல் முறை, அளிக்கப்படும் பயிற்சிகள், அதற்கான அட்டவணைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அந்தப் பள்ளியில் உள்ள கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் பராமரித்திட ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது :

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்துள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும்போது அங்குள்ள பள்ளிகளில் இதுபோன்று ஆய்வுகளை மேற்கொண்டு, முதலமைச்சரிடம் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

சேலம் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்குதரமான உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் மாணவர்கள்பள்ளிக்கு காலையில் விரைவாக வருகின்ற னர். புதிதாக மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்