நாட்டின் வளர்ச்சிப் பாதைக்குஏற்ப மாணவர்கள் வேலைவாய்ப்பையும் வாழ்க்கையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவிஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடிஇயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் காணொலி வாயிலாக 36-வது பட்டமளிப்பு விழா விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசும்போது, ‘‘மாணவர்கள் பாடங்களை ஆழப் படித்து அதன் நுணுக்கங்களை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் படிக்கும் பாடங்களின் அடிப்படையைபுரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், நம் வாழ்வின் உயர்வுக்குஅனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வது அவசியம்.மாணவர்களாகிய உங்கள் வாழ்வில் அடுத்த 30 ஆண்டுகளில் பலமாற்றங்களை எதிர்கொள்வீர்கள்.நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு ஏற்பமாணவர்கள் வேலைவாய்ப்பையும் வாழ்க்கையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். உயர்ந்த நிலைக்கு நம்மை கொண்டுச் சென்றபெற்றோர், ஆசிரியர்கள் மற்றும்கல்வி நிறுவனங்களை நன்றி உணர்வுடன் நினைவுகூர வேண்டும்’’ என்றார்.
விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘உயர் கல்விதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். நாட்டில் உயர்கல்வி சந்தித்து வரும் முக்கியமான சவால்களில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆராய்ச்சி மேற்கொள்வதில் போதுமான ஆராய்ச்சியாளர்கள் இல்லாதது, நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறைவு போன்றவை முக்கியமானவை. இவை, ஆராய்ச்சிகளில் சிறப்பாக செயல்படும் ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளுடன் நம்மை ஒப்பிடும்போது, நாம் சற்று பின்தங்கி உள்ளோம் என்பதை உணர்த்துகின்றன.
இந்தியாவில் உயர் கல்வி சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு போதிய நிதி வசதி இல்லாதது, கல்வி மற்றும் நிர்வாகத்தில் தன்னாட்சி இல்லாததும் காரணம். விஐடியில் கடந்த ஆண்டு 844தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்தன.
பொதுவாக, மாணவர்கள் வேலையை தேடிச் செல்லாமல்வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். நாம் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றமதி செய்வதற்கும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் போதுமான வசதி நம்மிடம் உள்ளன’’ என்றார்.
பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 7,569 மாணவ - மாணவியர் பட்டம் பெற்றனர். இவ்விழாவில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ராம்பாபு கோடாளி, இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்யநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
55 mins ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago