ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் பதிலளித்துள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன / தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சிபிஎஸ்இ 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சிஐஎஸ்சிஇ நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வுகள் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. சிஐஎஸ்சிஇ வாரியத்தில் 10-ம் வகுப்புக்கு மே 5-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குவதாக இருந்தது. 12-ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து சிஐஎஸ்சிஇ தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி அரதூண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தற்போதைய நிலைமையை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத் திட்டங்களில் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைப்பது / ரத்து செய்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும்.
எனவே, மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் தேர்வுகள் குறித்து, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம். இதுகுறித்து சிஐஎஸ்சிஇ இணையதளத்தில் அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பொதுத் தேர்வின்போதும் கரோனா பரவலால் சிஐஎஸ்சிஇ வாரியம், தேர்வுகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago