டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்துக்கு மார்ச் 20, 21-ம் தேதிகளில் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாக (உறுப்புக் கல்லூரி) டீன் பேராசிரியர் செந்தில் குமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) வரும் மார்ச் 20, 21-ம் தேதிகளில் அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
எம்சிஏ படிப்புக்கு 770 மாணவர்களும், எம்பிஏ படிப்புக்கு 1,315 மாணவர்களும், எம்.இ. மற்றும் எம்.டெக். படிப்புகளுக்கு 648 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
எனவே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகம் வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவைப்படும் மாணவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
வலைஞர் பக்கம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
58 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago