10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், தேர்வுக் கட்டணத்தை திருப்பித் தரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டது. தனியார்பள்ளி மாணவர்களிடம் 10-ம்வகுப்புக்கு ரூ.115, 11-ம் வகுப்புக்கு ரூ.175 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்பட்டது. செய்முறை தேர்வுக்காக ரூ.225-ம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் செலுத்திய தேர்வுக்கட்டணத்தை தேர்வுத் துறை திருப்பிதர வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மற்ற மாநிலங்களைவிடகுறைவாகவே தமிழகத்தில் பொதுத் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேர்வு ரத்துசெய்யப்பட்டாலும் வினாத்தாள்தயாரிப்பு உட்பட முன்னேற்பாடுகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுதல் போன்ற செலவினங்கள் இருப்பதால் கட்டணத்தை திருப்பி செலுத்த வாய்ப்பு குறைவு” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
சினிமா
25 mins ago
வாழ்வியல்
57 mins ago
உலகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago