தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. பட்டம் பெறத் தகுதியான மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்துத் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
''பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. எனவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெறுவதற்குத் தகுதியான மாணவர்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம். வரும் ஜன.18-ம் தேதி வரை இதற்குக் கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்த மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட கல்லூரி மூலமாகப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். சீர்மிகு சட்டக் கல்லூரியில் படித்தவர்கள், சம்பந்தப்பட்ட துறை இயக்குநர் மூலமாக விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தின் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்''.
இவ்வாறு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
24 mins ago
இந்தியா
18 mins ago
தமிழகம்
35 mins ago
வாழ்வியல்
26 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago