‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘சங்கர்ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்துவழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும்யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால்,அதற்கான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கான செலவு… என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
அந்தத் தயக்கத்தைப் போக்கும்வகையில், இந்தத் தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிமாணவ - மாணவிகளும், யுபிஎஸ்சி,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராவோரும் கலந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு பணிப்படை கூடுதல் டிஜிபிடாக்டர் எம்.ரவி, ஐபிஎஸ், அஸ்ஸாம் கழிரங்கா தேசியப் பூங்காவின் வன உதவி கன்சர்வேட்டர் பி.பிறைசூடன், ஐஎஃப்எஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கருத்துரையாற்ற உள்ளனர். இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.
பதிவு கட்டணம் கிடையாது
இதில் பங்கேற்க பதிவுக் கட்டணம் கிடையாது. பங்குபெற விரும்புவோர் https://connect.hindutamil.in/event/44-alapiranthom.html என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
2 hours ago