‘நீட் - மெடிக்கல் கவுன்சலிங்’ கருத்து பகிர்வு, ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி நவ.8-ல் நடக்கிறது: ‘ஸ்பைரோ’, ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்குகின்றன

By செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்று, அதற்கான மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது மருத்துவக் கலந்தாய்வு விரைவில் நடக்க உள்ளது.

இந்நிலையில், ‘ஸ்பைரோ பிரைம் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட்ஸ்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் ‘நீட் மெடிக்கல் கவுன்சலிங்’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்வை நடத்துகிறது.

ஞாயிறு காலை 11 மணிக்கு...

நீட் தேர்வில் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண், தரவரிசை, கல்லூரிகளை தேர்வு செய்வது என மருத்துவக் கலந்தாய்வு தொடர்பாக மாணவ, மாணவிகளின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் நோக்கிலும், ஆன்லைன் கலந்தாய்வு குறித்து அவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும் நடத்தப்படும் இந்த நிகழ்வு வரும் 8-ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணிக்கு நடக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சிநிறுவனத்தின் துணைவேந்தருமான டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, சென்னை அண்ட் நாமக்கல் ஸ்பைரோ இன்ஸ்டிடியூஷன்ஸ் கல்வியாளர் எஸ்.எம்.உதயகுமார்ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.

பங்கேற்க கட்டணம் கிடையாது

இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், பெற்றோர் https://bit.ly/329GQyE, https://bit.ly/3elCnO6 என்ற இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

31 mins ago

சினிமா

36 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்