நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவர்கள்: இன்று மறு தேர்வு 

By செய்திப்பிரிவு

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கான மறு தேர்வு இன்று (அக்.14) மதியம் நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதில், 85 முதல் 90 சதவீதத்தினர் நீட் தேர்வில் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நீட் தேர்வை நடத்தியது.

எனினும் கரோனா தொற்று ஏற்பட்டதால் ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை எழுதாமல் தவறவிட்டவர்கள் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இன்று (அக்.14-ம் தேதி) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை, மீண்டும் நீட் மறு தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தேசியத் தேர்வுகள் முகமை செய்துள்ளது. தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலையான பாதுகாப்பு வழிமுறைகள் தனியாக வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே அக்.16-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்