காமராசர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

By என்.சன்னாசி

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 20 சதவீத மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழகங் கள் நிர்ணயித்தபடி இளங்கலைப் பாடப்பிரிவுகளில் வகுப்புக்கு 60 மாணவ, மாணவிகளும், அறி வியல் பாடப்பிரிவுகளில் ஆய் வக வசதியைப் பொறுத்து 40 மாணவர்களும் இனச்சுழற்சி அடிப்படையில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியிலும் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப கடைசி நேரத்தில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அந்தந்த பல்கலைக் கழகம் அனுமதி வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு அனைத்து கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதிக அளவில் விண்ணப்பங்கள் வரப்பெற் றுள்ளன. இதையடுத்து கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக் கழகங்கள் அனுமதி வழங்கி யுள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பல்கலை. உறுப்புக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என மொத்தம் 106 கல்லூரிகளில் இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கலை பாடப்பிரிவு வகுப்புகளில் கூடுதலாக 12 மாணவர்களையும், அறிவியல் பாடப்பிரிவு வகுப்புகளில் கூடுத லாக 8 மாணவர்களையும் சேர்த் துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள் ளது.

இதுகுறித்து மதுரை காமராசர் பல்கலை. துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறுகையில், தமிழக அரசின் உயர் கல்வித் துறை உத்தரவின்பேரில் காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உட்பட்ட அனைத்துக் கல்லூரி களிலும் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது. இதற் கான சுற்றறிக்கை அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து அதற்கான வசதிகளை ஏற்படுத்த கல்லூரி நிர்வாகங்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக அரசு கல்லூரி முதல்வர் ஒருவரிடம் கேட்ட போது, "கல்லூரி கட்டமைப்பு வசதியை பொறுத்தே கூடுதல் மாணவர்களைச் சேர்க்க முடியும். ஆய்வகம், போதிய வகுப்பறை யின்றி கூடுதல் மாணவர்களைச் சேர்த்தால், அதில் சில நடைமுறை சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, அதிகபட்சமாக 20 சதவீதம் கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டாலும், அந்தந்த கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப 10 அல்லது 15 சதவீத மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்