நீட் தேர்வை ரத்து செய்வதே அரசின் கொள்கை; பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

By செய்திப்பிரிவு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை என்றும் தற்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே முதியோர் உதவித் தொகைக்கான ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முழுமையாகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்வரின், அரசின் கொள்கை

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் வழங்கியுள்ளார். வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற உத்தரவாதமும் தரப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்துள்ளனர். செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். இதன்மூலம் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டைவிட அதிக மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை. அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுவரை அத்தகைய தகவல் வரவில்லை. வந்தால் விரைவில் சொல்கிறேன்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

ஜோதிடம்

14 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்