திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தி இருந்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே, ஜூன் 22-ல் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் கட்டுப்பாட்டு துறை அலுவலர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதியை சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களே முடிவு செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தி, நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago