இணையவழி வகுப்புகள் ஆகஸ்ட் 3 முதல் தொடக்கம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன், அனைத்து இணைப்பு கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

2020-21-ம் கல்வி ஆண்டுக்கான அனைத்து இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை செப்டம்பர் 10-ம்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில்2, 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், முதுநிலை பட்டப்படிப்பில் 2-ம்ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 3-ம் தேதி இணைய வகுப்புகளை தொடங்க வேண்டும்.

எனவே இணையவழி கற்பித்தலை மேற்கொள்ள பேராசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப வசதிகளை கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு செய்துதர வேண்டும்.

முதலாமாண்டு மாணவர்களுக்கான இணைய வழிவகுப்புகள் ஆகஸ்ட் 19-ம்தேதி தொடங்கப்படும்.

எனவே,மாணவர்கள் கல்லூரிகளில் அளித்த செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை பாதுகாப்பாக வைக்க வேண்டும். மாணவர்களின் இணையதள வகுப்புகளில் கலந்துகொண்ட வருகைப்பதிவு விவரங்களை அந்தந்த துறைகளில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்