பிளஸ் 1 பொதுத்தேர்வில், மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தேர்வில் 98.10 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுத் தேர்வுகள் துறை சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 படித்த மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று (ஜூலை 31) காலை வெளியாகின.
இதில் 357 பள்ளிகளைச் சேர்ந்த 98.10 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதையடுத்து, கோவை மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் பிடித்தது.
இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா கூறியதாவது:
''கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய 15,415 மாணவர்களில் 15,011 பேரும், 18,832 மாணவிகளில் 18,586 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 34,247 பேர் பொதுத்தேர்வு எழுதியதில் 33,597 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 97.67 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த கோவை மாவட்டம், இந்த ஆண்டு 98.10 சதவீதம் தேர்ச்சியைப் பதிவு செய்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 13 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 86 அரசுப் பள்ளிகளில் படித்த 8,207 மாணவர்களில் 7,817 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 93.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 95.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கலைப் பாடப்பிரிவில் 96.41 சதவீதம் பேரும், அறிவியல் பாடப்பிரிவில் 98.49 சதவீதம் பேரும், வணிகவியல் பாடப்பிரிவில் 97.90 சதவீதம் பேரும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 97.39 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 95.25 சதவீதம் பேரும், மாநகராட்சிப் பள்ளிகளில் 96.81 சதவீதம் பேரும், ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் 97.96 சதவீதம் பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.79 சதவீதம் பேரும், நகராட்சிப் பள்ளிகளில் 99.14 சதவீதம் பேரும், அறநிலையப் பள்ளிகளில் 94.08 சதவீதம் பேரும், அரசு உதவி பெறும் பகுதி பாடப்பிரிவுப் பள்ளிகளில் 99.70 சதவீதம் பேரும், மெட்ரிக் பள்ளிகளில் 98.98 சதவீதம் பேரும், பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 98.98 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்''.
இவ்வாறு கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறினார்.
மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாவட்ட மாணவர்களுக்கு, ஆட்சியர் கு.ராசாமணி உள்ளிட்ட உயரதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
13 hours ago