தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 654. பள்ளி மாணவ, மாணவிகளாக தேர்வெழுதியோர் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442. இதில், மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 881. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 561. பொது பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 424. தொழில் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 18.
இந்நிலையில், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜூலை 31) வெளியிட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் 96.04%. மாணவிகள் 97.49% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 94.38%. மாணவியர் மாணவர்களைவிட 3.11 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 secs ago
இந்தியா
7 mins ago
இந்தியா
19 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
37 mins ago
சுற்றுச்சூழல்
47 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
42 mins ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago