பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு

By செய்திப்பிரிவு

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மார்ச் 26-ம் தேதிபிளஸ்-2 வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாட தேர்வுகளை எழுத முடியாமல்போனவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிளஸ்-2 மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியிலேயே மறுதேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 21 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.

தனித்தேர்வர்களுக்கு ஏற்கெனவே பிற தேர்வுகளை எழுதிய மையங்களிலேயே தேர்வுகள் நடைபெறும். மேலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு அறைகள் தூய்மைப்படுத்தப் பட்டுள்ளதுடன், மாணவர்கள் பயன்படுத்த கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளன. காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மொத்தம் 76 மாணவர்கள் மறுதேர்வு எழுதுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

52 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்