கட்டாயத் தேர்ச்சி உத்தரவை மீறினால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை ​

By செய்திப்பிரிவு

1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் அனைத்துவித பள்ளிகளுக்கும் விடுமுறை தரப்பட்டது. மேலும், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும் ஏற் கெனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்கப்படும் என்றும் பெற்றோர்களுக்கு சில தனியார் பள்ளிகள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு அரசின் ஆணையினை மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இதுதொடர்பான சுற்றறிக்கையை அனுப்பி அறிவுறுத்தல் வழங்க வேண்டும். மேலும், அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கும் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்