கரோனா அச்சுறுத்தல்: பிரதமரின் நிதிக்கு சிபிஎஸ்இ ரூ.21 லட்சம் வழங்க முடிவு

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிரதமர் நிதிக்கு ரூ.21 லட்சம் நிதி அளிப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸுக்கு இந்தியாவில் இதுவரை 1070-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி ட்வீட் செய்தார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அந்தக் கணக்குக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் சிபிஎஸ்இ தனது ஊழியர்களின் ஊதியத்தைக் கொண்டு நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உடல் நலன், வாழ்க்கை, பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு கரோனா தொற்று, முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலை எதிர்கொள்ள பிரதமரின் அவசரகால நிதிக்கு சிபிஎஸ்இ சார்பில் ரூ.21 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளோம். இதற்காக சிபிஎஸ்இ குரூப்-ஏ ஊழியர்கள் தங்களின் இரண்டு நாள் ஊதியத்தையும், குரூப்-பி மற்றும் குரூப்-சி ஊழியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தையும் வழங்கியுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

9 mins ago

சினிமா

16 mins ago

விளையாட்டு

39 mins ago

வணிகம்

51 mins ago

இந்தியா

53 mins ago

சினிமா

59 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்