அருணாச்சலப் பிரதேசத்தின் மாவட்டமொன்றில், அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க தடுப்பூசி அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில், சுபன்சிரி மாவட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரக் கூட்டமைப்பு சார்பில் இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் துணை இயக்குநர் நெண்டிங் சதுங் கூறும்போது, ''அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் உடல்நலன் பேணிக் காக்கப்பட வேண்டும். இதற்கு அவர்களின் தடுப்பூசி போடப்பட்ட விகிதத்தை அதிகரிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் இதை மேற்கொண்டு குழந்தைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையின்போதே தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஜனவரி 19-ம் தேதி நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து நிகழ்வில், மாவட்டம் முழுவதும் நோய்த்தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இலக்கை எட்ட மாவட்டம் முழுவதும் 96 போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. மருத்துவ ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 384 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago