மாநில டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாணவர்கள் 11 தங்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் கடந்த 25 மற்றும் 26-ம் தேதிகளில் மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் மதுரை டேக்வாண்டோ அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்று 11 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம் மற்றும் 4 வெண்கலப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் ஓவர்ஆல் ‘ரன்னர் அப்’கோப்பையைக் கைப்பற்றினர்.
சண்டைப் பிரிவில் ஸ்ரீ ஹரி, அர்தியக்ஸ், விஷ்ணுப்பிரியன், ஹரி சரவணா, அப்துல் சமத், ஸ்ரீமுருகன், சச்சின் அஸ்வின், மணிகண்டன், முத்து பிரசன்னா மற்றும் நவீன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
ரூபேஷ், பிரகாஷ்குமார், விஜய் அருணாச்சலம், தாஜ் மாலிக் மற்றும் ரிக்கி கேமரூன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். சஞ்சீவ், சங்கரேஸ்வரன், சந்தோஷ், ரோகன் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர் .
இம்மாணவர்கள் மே மாதம் பஞ்சாபில் நடக்கும் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மதுரை டேக்வாண்டோ அகாடமி செயலாளர் நாராயணன் மற்றும் பயிற்சியாளர்கள் கார்த்திக், ரகுராமன், சுருதி மற்றும் முத்துக்கருப்பன் ஆகியோர் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
தமிழகம்
32 mins ago
உலகம்
47 mins ago
தமிழகம்
56 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago