வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஓவியப் போட்டிகள்

By செய்திப்பிரிவு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதுச்சேரி மாநிலத் தேர்தல் துறை சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாநிலத் தேர்தல் துறை சார்பில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி, பாரதி பூங்காவில் 50 அடி நீளமுள்ள வெள்ளைத் துணியில் ஓவியம் வரையும் போட்டிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து மக்களாட்சி பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேசியக் கொடி, நாடாளுமன்றம், வாக்குப் பதிவு இயந்திரம், நீதி தேவதை, இந்திய தேசம், வாக்களிக்கும் முறை உள்ளிட்டவற்றை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தி இருந்தனர்.

இந்த ஓவியப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெறுபவர்களுக்கு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்