பள்ளிகளில் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பு கட்டாயம்: மகாராஷ்டிரா அமைச்சர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

குடியரசு தினத்தில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் அரசியலமைப்பு முகவுரையை வாசிப்பது அறிமுகப்படுத்தப்படும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அவர் கூறும்போது, அனைத்துப் பள்ளிகளிலும் அரசியலமைப்பு முகவுரையை வாசிப்பது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குடியரசு தினத்தில் இருந்து இந்த முறை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும். காலை பிரேயருக்குப் பிறகு மாணவர்கள் இதை வாசிப்பர்.

இதன்மூலம் குழந்தைகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் குறித்தும் அதன் கொள்கைகள் குறித்தும் தெரியவரும். அதுசார்ந்த மற்ற சட்டங்கள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்வர்.

ஒரு மாணவர் தினந்தோறும் அரசியலைப்பின் முகவரியை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டால், தான் ஓர் இந்தியக் குடிமகன் என்பதை அவர் உணர்ந்துகொள்வார். அதேபோல அரசியலமைப்புக் கூறுகளையும் அதில் பொதிந்துள்ள அர்த்தங்களையும் அவரால் புரிந்துகொள்ள முடியும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ஆட்சி புரிந்து வருவது நினைவு கூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்