விருதுநகர் அருகே சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் அமர்ந்து நீண்ட நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார் 9 வயது சிறுமி ஒருவர்.
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை யைச் சேர்ந்த கோவிந்தராஜ்- பார்வதி தம்பதியின் மகள் முஜிதா (9). விருதுநகர் அருகே செவல்பட்டி யில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த மூன்றாண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் மாணவி முஜிதா இன்று ஒரு அடி அகலமும் 21 இன்ச் நீளமும் கொண்ட சிறிய மீன் தொட்டிக்குள் அமர்ந்து கண்டபெருண்ட ஆசனம் என்ற ஆசனத்தில் தனது இரு கால்களையும் முதுகு பக்கமாக வளைத்து முகத்திற்கு முன் பகுதி கொண்டுவந்து அமர்ந்து 8 நிமிடங்கள் இரண்டு நொடிகள் தொடர்ந்து இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனை நோபள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கான சான்றிதழும் மாணவி முஜிதா வுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் மூன்று நிமிடங்கள் மட்டுமே இருந்து செய்த சாதனையை மாணவி முஜிதா தற்பொழுது முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago