கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''வரும் பிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும். இதனால் ஆசிரியர் பற்றாக்குறை என்பதே எதிர்காலத்தில் இருக்காது.
ஆசிரியர் தேர்வு மையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுகள் வழக்காடு மன்றத்துக்குச் செல்கின்றன. இதனால் 6 மாதம், ஓராண்டு எனத் தாமதம் ஏற்படுகிறது. இனி அந்த நிலை ஏற்படாத வகையில் டிஆர்பிக்கென தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு வழங்க, புதிய புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
தமிழகம்
10 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
44 mins ago
விளையாட்டு
36 mins ago
இந்தியா
44 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago