புதுடெல்லி
நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் நேற்று கூறியதாவது:
நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள் போர்டல் அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றன.
தற்போது உள்ள 193 பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 310 மில்லியன் டன் நிலக்கரி கிடைக்கிறது. 55 புதிய பசுமை நிலக்கரி திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் 92 மில்லியன் டன் நிலக்கரி கூடுதலாக கிடைக்கும்.
புதுடெல்லி
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:
காஷ்மீரில் தற்போது அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு, மாணவர்களின் வருகைப்பதிவு 98% உள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடந்ததேர்வில் 98% மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தொடக்கத்தில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்
பட்டு, மாணவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. மேலும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என அனைத்து மருத்துவச் சேவைகளும் முழுமையாக செயல்படுகின்றன.-பிடிஐ
மும்பை: இந்தியாவின் முதல் தொழில்நுட்ப ஜவுளி ‘ஹேக்கத்தான்’ நிகழ்ச்சி மும்பையில் நாளை நடக்கவுள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சியை நடத்தும் மெஸ்ஸி பிராங்பேர்ட்இந்தியா அமைப்பு வெளியிட்ட அறிக்கை: உற்பத்தி நிறுவனங்களின் சிறப்பு இழைகள், நூல்கள், ஜவுளி, துணிகள், பிராண்டுகள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். சிறு, நடுத்தர தொழில்முனைவோர், சுற்றுச்சூழல் அமைப்பு ஆகிய தரப்புகளின் முன்னேற்றத்துக்கு இந்நிகழ்ச்சி பயன்படும்.
இந்திய ஜவுளித்துறையின் புதுமைகளை எடுத்துக்காட்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago