அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா: உத்தர பிரதேசத்தில் லட்சக்கணக்கில் மக்கள் புனித நீராடல்

By செய்திப்பிரிவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, முதல் முறையாக உத்தர பிரதேசத்தில் கார்த்திகை பூர்ணிமா விழா களை கட்டியுள்ளது. சரயு நதியில் லட்சக்கணக்கில் மக்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘அந்த நிலத்தில் பாபர் மசூதி இருந்ததை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. நிலம் யாருக்கும் சொந்தம் இல்லை. அது அரசுக்கு சொந்தமானது. அதை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். இதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதேநேரத்தில் வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் தர வேண்டும்’’ எனக் கூறி மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது.

ஆண்டுதோறும் தீபாவளிக்குப் பிறகுஉத்தர பிரதேசத்தில் கார்த்திகை பூர்ணிமா விழா சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, அயோத்தியில் நேற்று சரயு நதியில் பக்தர்கள் ஏராளமானோர் புனித நீராடினர். இதன் மூலம் எல்லோருக்கும் நன்மை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சரயு நதியில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

20 ஆயிரம் போலீஸார்சுமார் 4 முதல் 5 லட்சம் வரை பக்தர்கள் சரயு நதியில் வழிபாடு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற் கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு இந்த விழா நடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவப் படை எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

மேலும்