தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், சிபிராஜ் மகன் தீரன் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் இளம் நாயகர்களுள் ஒருவர் சிபிராஜ். நடிகர் சத்யராஜின் மகனான இவர், தற்போது 'ரங்கா', 'மாயோன்', 'வால்டர்' மற்றும் 'கபடதாரி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், 'வால்டர்' மற்றும் 'கபடதாரி' ஆகிய படங்களின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிபிராஜின் மனைவி பெயர் ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகனான தீரன், தற்போது தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார்.
இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில், "எனது மகன் தீரன், இன்று புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார் என்ற செய்தியைப் பகிர்வதில் அதிக மகிழ்ச்சி, பெருமை கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் சிபிராஜ்.
இந்தப் பதிவுக்குத் தமிழ்த் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணமுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago