தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை

தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு இனிமேல் இலவச மடிக்கணினி வழங்கப் படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்ட அரசாணை:

நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மடிக்கணினி முழுமையாக வழங்கப்பட்டு விட்டது.

இதையடுத்து கடந்த 2017-18மற்றும் 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மேற்கண்ட கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்து தற்போது உயர் கல்வியில் சேர்ந்து படித்து வரும் (பாலிடெக்னிக் உட்பட) மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க வேண்டும். மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்து இருந்தாலோ அல்லது படிப்பை தொடராமல் இருந்தாலோ அவர்களுக்கு மடிக்கணினி வழங்கத் தேவையில்லை. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே மாணவர்களுக்கு இனிமேல் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்