கொல்கத்தா
5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைமுறை மேற்கு வங்கத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கட்டாயத் தேர்ச்சி முறையை நீக்க முடிவுசெய்துள்ள மேற்கு வங்க அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைமுறையை மீண்டும் கொண்டு வர உள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, ''அடுத்த கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மீண்டும் தேர்ச்சி - தோல்வி முறை கொண்டு வரப்படும்.
6 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்குச் செல்ல அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க அரசு, 2010-ம் ஆண்டு கட்டாயத் தேர்ச்சி முறையைக் கொண்டு வந்தது. அப்போது, இந்த முறை மோசமான தரம் கொண்ட மாணவர்களை உருவாக்கிவிடும் என்று ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago