எஸ்ஐ கொலை வழக்கில் கைதான - இளைஞரை ஒருநாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடர்களால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.பூமிநாதன் கடந்த 22-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தஞ்சை மாவட்டம் தோகூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன்(19) மற்றும் சிறுவர்கள் 2 பேர் என 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில், மணிகண்டன் திருமயம் கிளை சிறையிலும், சிறுவர்கள் திருச்சி கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரிகீரனூர் நீதிமன்றத்தில், கீரனூர்காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் மனுத் தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி டி.பிச்சைராஜன், நேற்று பகல் 1 மணியில் இருந்து இன்றுபகல் 1 மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துஉத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து மணிகண்டனை அழைத்து சென்று போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்