சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக 2-வது நாளாக ஆஜரான அதிமுகமுன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துஅமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புபோலீஸார் கடந்த ஜுலை 22-ம்தேதி சோதனை நடத்தினர். அவர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதசொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்து குவிப்புவழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணைக்காக, சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் நேற்று முன்தினம் காலை ஆஜராகினர். அவர்களிடம் 6 அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேற்று 2-வது நாளாக விசாரணைக்கு விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தீபாவளி முடிந்த பிறகு மீண்டும் விசாரணைக்கு ஆஜராவதாக விஜயபாஸ்கர் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விசாரணையின்போது காவல் துறையினர் எந்த நெருக்கடியும் தரவில்லை. வழக்கு தொடர்பாக மீண்டும் சம்மன் அனுப்பினாலும் ஆஜராவேன். நான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறுவது தவறு. சொத்துகளுக்கான அனைத்துஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன். கணக்கில் வராத பணம் என்றுஎன்னிடம் எதுவும் இல்லை. எல்லாசொத்துகளுக்கும் கணக்கு உள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
17 mins ago
சினிமா
18 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
9 hours ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சுற்றுலா
2 hours ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago