பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த தினம் : முதல்வர் ஸ்டாலின், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மரியாதை

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் அண்ணா வின் 113-வது பிறந்த தினத்தைமுன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத் தினர்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி உள்ளிட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக் கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வரும் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில், அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தேனியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான கே.பழனிசாமி, அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதைசெலுத்தினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கலிபூங்குன்றன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மதிமுக தலைமை அலுவலக மான தாயகத்தில், அண்ணா சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் துணை பொதுச்செய லாளர் எல்.கே.சுதீஷ், அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது கட்சி அலுவலகத்தில், அண்ணா திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அண்ணா சாலையில் அண்ணாவின் படத்துக்கு மரி யாதை செலுத்தினார்.

மாநிலம் முழுவதும்..

இதேபோல தமிழகம் முழு வதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலை வர்கள், நிர்வாகிகள், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா சிலைக்கு அதிமுக எம்.பி.க்கள் மு.தம்பிதுரை, நவநீத கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

வணிகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

4 hours ago

மேலும்