‘டிக்’ நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு :

By செய்திப்பிரிவு

தமிழக பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் (டிக்) மேலாளர் (நிதி, சட்டம்), முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம், நிதி, சட்டம்) ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த பணிகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 14-ம் தேதி (நாளை) என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்வாக காரணத்தால், ஆன்லைனில் (www.tiic.org) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்