தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 4,305, பெண்கள் 3,512 என மொத்தம் 7,817 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 904, ஈரோட்டில் 870, சென்னையில் 455 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்து 22,497 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 5 லட்சத்து 19,849 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 21,928 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 1,375, கோவையில் 1,277 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 17,043பேர் குணமடைந்து வீடு களுக்குத் திரும்பினர். கோவையில் 10,802, ஈரோட்டில் 8,326, சென்னையில் 1,316 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 69,372 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
31,197 பேர் உயிரிழப்பு
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 182 பேர் உயிரிழந்தனர். கோவையில் 17, சென்னையில் 14 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,197 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 8,046 பேர் இறந்துள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 29,211, கோவையில் 2 லட்சத்து 12,493, செங்கல்பட்டில் ஒரு லட்சத்து 54,118, திருவள்ளூரில் ஒரு லட்சத்து 9,491 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago