தமிழகம் முழுவதும் - ஒரே நாளில் 405 பேர் கரோனாவால் உயிரிழப்பு : புதிதாக 17,321 பேருக்கு தொற்று

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால் 405 பேர் உயிரிழந்தனர். புதிதாக 17,321 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 9,522, பெண்கள் 7,799 என மொத்தம் 17,321 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 2,319, ஈரோட்டில் 1,405, சென்னையில் 1,345 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 92,025-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 4 லட்சத்து 98,586 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 59,597 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் கோவையில் 4,992, சென்னையில் 3,281 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 31,253 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.

கோவையில் 24,022, சென்னையில் 14,678 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 4,258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 405 பேர் உயிரிழந்தனர். கோவையில் 62, சென்னையில் 52 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,170-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 7,613 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 20,877, கோவையில் ஒரு லட்சத்து 95,362,செங்கல்பட்டில் ஒரு லட்சத்து 48,732, திருவள்ளூரில் ஒரு லட்சத்து 6,138 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 271 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 92 லட்சத்து 43,359 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 80,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

44 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்