மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 881 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,181 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி நீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது. நேற்று முன்தினம் 96.77 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 96.78 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 60.74 டிஎம்சி-யாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்