வன்கொடுமை புகாரில் முன்னாள் அமைச்சர் - மணிகண்டனை கைது செய்ய ஜூன் 9 வரை இடைக்கால தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

வன்கொடுமை புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும்9-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் அடையாறு மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மணிகண்டன் தரப்பில் வழக்கறிஞர் ஜான் சத்யன், சாந்தினி தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி, போலீஸார் தரப்பில் அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி வாதிட்டனர்.

முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சாந்தினி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அதுவரை மணிகண்டனை கைது செய்யக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

49 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்