சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அண்ணாநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி கே.ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜி்ப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், இந்தவிவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருவதாகவும் சிறப்பு டிஜிபி-க்கு எதிரான வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்து வருவதாகவும் அந்த வழக்கு வரும் ஏப்.30-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு டிஜிபி தரப்பில், இந்த வழக்கு விசாரணைக்கும் துறை ரீதியிலான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக வும் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை தனிநீதிபதி கண்காணித்து வருவதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர். மேலும் இந்த உத்தரவு சிறப்புடிஜிபி மீதான விசாரணைக்கு எந்தபாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும்விசாரணை நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்றும் ஒருதலைபட்சமாக முடிவெடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத் தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago