இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது :

By செய்திப்பிரிவு

அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கடந்த 7-ம்தேதி இரவு இருபிரிவு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன்(25), செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(27) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தால் இரு சமூகத்தினர் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துபெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றியச் செயலாளர் சத்யா(24), அஜித்(24), மதன்(37), சுரேந்தர்(19), நந்தா(20), சாலை கிராமம் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி(20), பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சூர்யா(23) ஆகிய 7 பேரை கைதுசெய்தனர். மேலும், சிலரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சிவா(32), வேடல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (23) ஆகியோர் கடந்த 2 தினங்களுக்குமுன்பு வேலூர் நீதித் துறை நடுவர்5-வது நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில், அரக்கோணம் அடுத்த சாலை கிராமம் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த மேகவர்ணம் (23) என்பவரை கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையிலான காவலர்கள் நேற்று காலை கைது செய்தனர். இரட்டை கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

கருத்துப் பேழை

32 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

16 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்