ஓய்வு பெற்றுவிட்டதால் - விசாரணை ஆணையம் செல்லாது : உயர் நீதிமன்றத்தில் சுரப்பா தரப்பில் வாதம்

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய சுரப்பாவுக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துஅரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சுரப்பா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சுரப்பா தரப்பில், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததாலும் தனக்கு எதிராக இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தற்போது ஓய்வு பெற்றுவிட்டதால் விசாரணை ஆணையம் செல்லாது என்று சுரப்பா தரப்பில் வாதிடப்பட்டது.

‘விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தாலும் அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ என்று ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து, வழக்கை வரும் ஜூன் மாதத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்