விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன் (45). 13-வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் அண்ணாமலை ஈஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அண்ணாமலை ஈஸ்வரன் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சேத்தூர் கரையடி விநாயகர் கோயிலுக்கு அண்ணாமலை ஈஸ்வரன் நேற்று வழிபடச் சென்றார். அப்போது மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தகவலறிந்த ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கர்மற்றும் போலீஸார் விசாரணைநடத்தியதுடன், அண்ணாமலையின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர்.
இக்கொலை பழிக்குப்பழியாக நடந்ததா அல்லது வேறுஏதும் காரணமா என சேத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
12 mins ago
உலகம்
12 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
5 hours ago