சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காமராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன். இவர் சென்னை ஒட்டேரியில் கடந்த 2014-ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கல்பனா, கார்த்திக், ஆனந்த் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் மதுரைமாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், காமராஜ்கொலை வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி, அவரதுசகோதரி மேரி தேன்மொழி உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஹேமலதா விசாரித்தார். அரசு தரப்பில் 34 சாட்சிகளில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காமராஜ் கொலை வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க நீீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
37 mins ago
இந்தியா
57 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago