கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து ஏமாற்றியது தொடர்பாக அமமுக பிரமுகர் மீது போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கும்பகோணம் தொகுதியின் சில பகுதிகளில் ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள ஒரு மளிகைக் கடையின் பெயருடன் ரூ.2,000 என அச்சிடப்பட்ட டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இதையடுத்து, அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருந்த மளிகைக் கடைக்கு வாக்காளர்கள் பலர் டோக்கனுடன் சென்று, ரூ.2,000-க்கு மளிகைப் பொருட்களைக் கேட்டனர். ஆனால், அந்த டோக்கனுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறி கடைக்குவந்தவர்களை திருப்பி அனுப்பிய கடை உரிமையாளர் ஷேக் முகமது, இதுதொடர்பான அறிவிப்பையும் தன் கடைவாசலில் ஒட்டினார். இதனால், டோக்கனுடன் சென்ற வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ம.கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் கொடுத்த புகாரின்அடிப்படையில், தேர்தல் விதிகளைமீறியதாக கொரநாட்டுக்கருப்பூரைச் சேர்ந்த அமமுக கிளைச் செயலாளர் கனகராஜ்(62) மீது கும்பகோணம் கிழக்கு போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அச்சடிக்கப்பட்ட மற்றும் விநியோகம் செய்யப்பட்ட டோக்கன்களின் எண்ணிக்கை குறித்தும்போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
இந்தியா
17 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வணிகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சுற்றுலா
3 hours ago
கல்வி
2 hours ago