மார்கழி மழையால் பயிர்கள் கடும் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயி களுக்கும், மக்களுக்கும் உடனடி

யாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும். ஏக்கருக்குரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராகஇருந்த நெற்பயிர்கள், தொடர்ச்சியாக பெய்த மார்கழி மழையில்அடியோடு மூழ்கி, பொங்கல் விழா நேரத்தில் விவசாயிகள் அனைவரும் பெருந்துயருக்கும்,பேரிழப்புக்கும் ஆளாகியிருப்பதுமிகுந்த வேதனை அளிக்கிறது.வடிவாய்க்கால்களை தூர்வாரும் பணியில் கோட்டை விட்ட அதிமுக அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கோட்டைவிட்டுள்ளது.

‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்காத அரசு, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தது, விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையும் பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இப்போது பெய்துள்ள கனமழையால் 14 மாவட்டங்களுக்குமேல் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, அரசின் நிவாரணம் ஏதும் இதுவரை கிடைக்காமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாசமாகியுள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், இனிமேல்தான் கணக்கெடுக்க போகிறோம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது. எனவே, மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்து, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் தாமதமின்றி கிடைப்பதற்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்