தங்கம் மாயம்: சாவியால் லாக்கரை திறந்தது உறுதி

By செய்திப்பிரிவு

சென்னையில் தங்கம் இறக்குமதி செய்யும் சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த2012-ம் ஆண்டு சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவைஅனைத்தும் அதே நிறுவனத்தின்லாக்கர்களில் வைத்து சீலிடப்பட்டது. அதில் 103 கிலோதங்கம் மாயமானது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கர்களில் தடயவியல் துறை நிபுணர்கள் கடந்த 8-ம் தேதி ஆய்வு நடத்தினர். லாக்கர்களை உடைத்ததற்கான தடயம் எதுவும் இல்லை. அவற்றில் இருந்த சீல்கள் அகற்றப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. எனவே, சாவிகள் மூலமாகவே தங்கம் திருடப்பட்டிருப்பது தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்